பள்ளிவாசல் மீது செருப்பு வீச்சு ! உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் மதக் கலவரம்.

பள்ளிவாசலில் செருப்பு வீசப்பட்டது! முஸ்லிம்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டது! கோரத்தாண்டவம் ஆடும் உத்தரபிரதேசம்.

துர்கா பூஜை ஊர்வலம்

வடநாடுகளில் துர்கா பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைப்பது போல துர்கா சிலை வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது.

விநாயகர் சிலையை குளத்தில் கரைப்பது போல துர்கா சிலையையும் குளத்தில் கரைப்பதற்காக ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டது. அந்த ஊர்வலத்தில் தான் பிரச்சனை அதிகமாகி இருக்கிறது.

பள்ளிவாசல் மீது செருப்பு வீச்சு ! உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் மதக் கலவரம்.

உத்திரபிரதேசத்தில் என்ன நடந்தது

உத்தரப்பிரதேசத்தில் Barabanki மற்றும் Bahraich போன்ற பல இடங்களில் துர்கா பூஜை நடைபெற்றது. துர்கா சிலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிரான பாடல்கள் ஒலிக்கப்பட்டது. தெருக்களின் வழியாக வரும் போது அங்குள்ள பள்ளிவாசல் வெள்ளைத்துணியால் மூடி மறைக்கப்பட்டது. பள்ளிவாசலின் முன்பு சிறிது நேரம் நின்ற இந்துத்துவா வாதிகள் முஸ்லிம்களுக்கு எதிரான பாடல்களை போட்டு பள்ளிவாசல் மீது செருப்பை வீசி கலர் சாயங்களை வீசி இருக்கின்றார்கள்.

READ MORE: அடித்து ஊத்த போகும் கனமழை ! பாலத்தில் நிறுத்தப்படும் கார்கள்.

இன்னும் சில இடங்களில் முஸ்லிம்களுடைய சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. முஸ்லிம்களுடைய வீட்டின் மீது ஏறி மாடியில் உள்ள பச்சை கொடியை பிடுங்கி ” ஜெய் பாகுபலி ” என்று கோசம் போட்டு காவி கொடியை கையில் ஏந்தி முஸ்லிம்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை போன்று கோபால் மிஸ்ரா என்ற இளைஞர் இளைஞர் வன்முறையில் ஈடுபட்டார்.

அடையாளம் தெரியாத நபர்களால் அந்த கோபால் மிஸ்ரா என்ற இளைஞர் 10 தடவை சுடப்பட்டு இருக்கிறார். இதனால் மேலும் உத்தரபிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஆக்ரோஷமாக வீடியோவில் பேசும் இந்துத்துவாவாதிகள்

உத்திரபிரதேசத்தில் இந்துத்துவாதிகள் ஆக்ரோசமாக முஸ்லிம்களை நசுக்க வேண்டும், அவர்களுடைய வீடுகள் இடிக்கப்பட வேண்டும் என்பதாக வன்முறை பேச்சுக்கள் நிரம்பிய வீடியோக்களை யோகி ஆதித்யநாத் அவர்களின் பெயரை சொல்லி பரப்பி வருகிறார்கள்.

இதனால் உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் வன்முறை தூண்டப்பட்டிருக்கிறது. இதற்கு முழு காரணம் உத்தரபிரதேசத்தில் ஆட்சி நடத்த தெரியாத யோகி ஆதித்யநாத் தான் என்றும், அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து பகிர்ந்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

Leave a Comment